தேன் இனிமையிலும் இயேசுவின்
நாமம் திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே
1.காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே –
பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத்
தொலைத்தார் கண்டுணர் நீ
மனமே
2. பாவியியை மீட்க்த் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவர முண்டு
நிதம் துதி என் மனமே
3.காலையில் பனிபோல் மாயமாய்
உலகம் உபாயமாய் நீங்கி விடும்
என்றும் கர்த்தரின்
பாதம் நிச்சயம்
நம்பு கருத்தாய் நீ மனமே
4.துன்பத்தில் இன்பம் தொல்லையில்
நல்ல துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால்
அணைத்துனைக் காப்பார்
ஆசைக்கொள் நீ மனமே
5.பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப்
பிடித்துக் கொண்டால்தான் பேரின்ப
வாழ்வை பெறுவாய் நீ மனமே!