பரிசுத்தமான பரவசமே
தரிசிக்க செய்யும் திருமுகமே - 2
பரிசுத்தம் பெற வந்தோம்
தரிசிக்க செய்யும் திருமுகமே
தரிசிக்க செய்யும் திருமுகமே
1.விரும்பாத பாவம்
வேண்டாத சிந்தனைகள்
துரும்பாக நுழைந்து இரும்பாக மாறும் - 2
அரும்பாடு பட்ட
பெரும் பாதை பயணம்
வீணாகவே என்றும் போய்விடும் - 2
2.அகத்தினில் வாழும்
பாவத்தால் - உந்தன்
முகச் சாயல் மாறும் வேறுபடும்
தேவ சாயல் விலகிப் போகும்
தெய்வத்தின் மகிமை துரமாகும்
3.கர்த்தருக்கென்றும் பயந்திட்டால்
கரம் பிடித்தே உன்னை நடத்துவார்
உன்னை விட்டு விலக மாட்டார்
உன்னை என்றும் கைவிட மாட்டார்!