கீழே வேர் கொள்ளுவோம்
மேலே கனி கொடுப்போம்
கீதங்கள் பாடியே
வேதம் எடுத்துரைப்போம் (2)
1.வேதத்தில் வேரூன்றி
ஆழமாய் ஆராய்வோம்
நாதரின் பாதத்தில்
வேதம் நாம் கற்றிடுவோம்
இயேசுவில் சார்ந்து நற்செய்தி
கூறிடுவோம்
நற்கனி தந்திடுவோம்
2.சீடராய் வாழ்ந்திடும்
வாழ்வினில் சீரடைவோம்
சேதங்கள் வந்தாலும்
சாய்ந்திடா வேர்கொள்ளுவோம்
விசுவாசமும் தியாகம் தரிசனமும்
வேர்களாய் விளங்கிடட்டும்
3.கிறிஸ்துவை அறியா மாந்தரை
தேடிச் செல்வோம்
இயேசென்னும் சொல்கேளா
மாந்தரைக் கண்டிடுவோம்
ஆத்துமாக்களை ஆதாயம்
செய்திடுவோம்
அர்ப்பணம் செய்திடுவோம்