தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
1.பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில்
ஏந்தியே துதிப்போம்
2.ஆபத்துநாளில் அரணாம்
கோட்டை நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன்
நம் அடைக்கலமே
3.இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக
தாங்கி ஆதரிப்பார்
4.சாத்தானின் கோட்டை
தகர்ந்தொழிய ஏகமாய்த்
துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த
இயேசு நமக்குண்டே
5.ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜெ ஜெயராஜனுக்கு
ஜெயம் முழங்கிடுவோம்