நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா (2)
உலகத்தில் நூற்றாண்டு
நான் வாழ்ந்த போதும் (2)
உம் இல்லத்தில் வாழும்
ஒரு நாளே போதும் - நீரின்றி
1. பலகோடி வார்த்தைகள் நான்
கேட்டபோதும்
இயேசுவே நீர் பேசும்
ஒரு வார்த்தை போதும் (2)
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே (2)
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே!
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும்
அசையாதையா
உம் துணையின்றி உயிர்வாழ
முடியாதைய்யா!
3. எத்தனை நன்மைகள்
செய்தீரையா - அதில்
எதற்கென்று நன்றி சொல்லி
துதிப்பேனய்யா
அத்தனையும் சொல்ல
வேண்டுமென்றால்
ஆயிரம் நாவுகள் போதாதையா!