Type Here to Get Search Results !

Tamil Song - 243 - Naan Payapadum Naaliniley

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை  நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

1.உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம்  நம்மை

2.நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதுமில்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே