Type Here to Get Search Results !

tamil song - 164 - En Meipparey

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (2)

1.பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்(2)
என்னை இளைப்பாறச் செய்கின்றீர்!

2.ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்(2)
என்னை அபிஷேகம் செய்கின்றீர்!

3.இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே (2)
நான் நடந்தாலும் பயமில்லையே!

4.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் (2)

உம் கிருபை என்னைத் தொடரும்!