Type Here to Get Search Results !

Tamil Song -129 - Aananthamaga Anparai Paaduven

ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசை யவரென் ஆத்துமாவிற்கே
ஆனந்தமான ஆசீகளருளும் ஆண்டவர்
இயேசு போல் ஆருமில்லையே!

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே!

2.தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின்மேல் பெலம் அடைந்திடுவோம்!

4.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்

5.மகிமையும் நம்பிக்கை
சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்!