Type Here to Get Search Results !

Tamil Song - 776 - Puthithaai Nadanthu Vaarungal

புத்தியாய்  நடந்து வாருங்கள் -
திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள்
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு
நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து,
பாடிக்கொண்டு

1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? - திரு
உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்,
சீருடைய தெய்வப் பிள்ளைகள் -நீங்கள்;
ஏதிந்த தித்தரிப்பு செய்யும் வகைகள்
கூருடன் மெய்த் திருமறை குறித்துச்
சொல்வதைத் தினம் நேருடன்
ஆராய்ந்துபார்த்துநித்தியஒளியில்தானே

2. ஆவியை அடக்காதிருங்கள்- நான்
சொல்லுவதை அசட்டை
செய்யாமல் இருங்கள்
ஜீவனை அடையத் தேடுங்கள் -யேசுக்
கிறிஸ்தின் சிந்தையைத் தரித்துக்
கொள்ளுங்கள் மேவியே ஜெபம்,
மன்றாட்டு , விண்ணப்பம்,
வேண்டுதலோடு தாவி,
யேசுவைப் பிடித்து, தளரா
நடையோ டுன்னிப்,

3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் -
துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப்
பிடித்துளத்தில்
வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பகைத்துங்கள் நித்திய
ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள்
அடையும்படி முற்றிலும்,

4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? - நீங்கள்
எல்லாரும் பரன் மகன் தேட்டம்
அல்லவோ? தரிசிக்க நாட்டம்
அல்லவோ? - கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம்
அல்லவோ? பரிசனை செய்தவர்
பொற் பாதத்தை மனதில் உன்னிக்,
கரிசனை யோடு தேடிக், காணத்

தீயோன் நாணப் பாடிப்