Type Here to Get Search Results !

Tamil Song - 375 - Deva Siththam Niraivera Ennaiyum

தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்
தேவசத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே

1.முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களைக் கவரும் லீலிபுஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

2.பொன்னைப்போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார்

3.அத்திமரம் துளிர்விடாமல்
ஆஸ்திகள்அழிந்து
நஷ்டம்வந்தாலும் கர்த்தருக்குள்
சந்தோஷமாய் நித்தமும் மகிழ்ந்திருப்பேன்

4.நீதிமானை அனுதினமும்
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன்

5.முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

 6.சோதனையை சகிப்பவனே
சாந்தமும் பொறுமையுமுள்ளவனே
ஜீவக்கிரீடம் பெற்றிடுவான்

ஜோதியாய் பிரகாசிப்பான்