விளைந்த
பலனை அறுப்பாரில்லை
விளைவின்
நற்பலன் வாடிடுதே
அறுவடை
மிகுதி ஆளோ இல்லை
அந்தோ!
மனிதர் அழிகின்றாரே
1.அவர்
போல் பேசிட நாவு இல்லை
அவர்
போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா
மாந்தர் சத்தம்
உந்தன்
செவியினில் தொனிக்கலையோ – விளைந்த
2.ஆத்ம
இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம்
ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின்
வாசலில் நிற்பவர் யார்?
தினமும்
அவர் குரல் கேட்கலையோ – விளைந்த
3.ஆத்தும
தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர்
வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து
சென்று சேவை செய்வாய்
விளைவின்
பலனை அறுத்திடுவாய் – விளைந்த
4.ஒரு
மனம் ஒற்றுமை ஏக சிந்தை
சபைதனில்
விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து
நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய்
என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த
5.ஆவியின்
வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன்
நீயும் பெற்றிடுவாய்
சபையின்
நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம்
சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த
6.தேவனின்
சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின்
பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர்
நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை
நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த