Type Here to Get Search Results !

Tamil Song - 362 - Pani pola Peiyum Parisuththarey

பனிபோல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே

1.மேன்மையானவரே
மேகஸ்தம்பமே
ஊற்றுத்தண்ணீர் ஜீவநதி (2)
ஆனந்த தைலமே!

2.யுத்தங்கள் செய்பவரே
யோர்தனை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த (2)
உள்ளங்கை மேகமே!

3.வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக (2)

காப்பாற்றி வளர்ப்பவரே!