Type Here to Get Search Results !

Tamil Song - 138 - Yelai Ennai Meettavar Neerey

ஏழை என்னை மீட்டவர் நீரே எளியோரைக் காப்பவர் நீரே
என் இதய தெய்வமே - உம்மை எப்படி மற்றப்பேனோ
வாழ்த்திடுவேன் வல்லவரை!
வணங்கிடுவேன் நல்லவரை!
போற்றிடுவேன் புண்ணியரை!
புகழ்ந்திடுவேன் பரிசுத்தரை!

1.பாவியாக இருக்கையில் என்னை பாசத்தோடு தேடி வந்தீர்
பாவம் எல்லாம் கழிவிடவே - உம் ஜீவன் தந்தீரே
கள்வனென்று கண்டு கொண்டீர்
கண்டும் என்னை நேசிக்கிறீர்
காலமெல்லாம் உந்தன் அன்பை நினைக்க வைத்தீர்
இதயமதை கோயில் ஆக்கி இருக்கும் வரை புூஜை செய்வேன்
இல்லை என்று சொன்னால் எந்த ஜீவனையும் விட்டுச் செல்வேன்
- (வாழ்த்) (ஏழை)

2.என் வாழ்க்கை படகின் மேலே
அலைவந்து மோதின போது
கடல் மீது நடந்து வந்த கர்த்தர் நீர்தானே
அலைகளையும் அடக்கினீரே - புயல் காற்றை நிறுத்தினீரே
கரம்பிடித்து எந்தன் வாழ்வை உயரத்தில் நிறுத்தினீரே
- (வாழ்த்) (ஏழை)

3.உயிர் உள்ள நாட்கள் எல்லாம்
ஓடி ஓடி ஊழியம் செய்வேன்
உம்மைப் பாடி பாடி உயர்த்திடுவேன்
அப்பா உம் சந்நிதியில் எப்போதும் சந்தோஷம் (2)
எப்பொழுதும் உந்தன் அன்பை நினைத்தாலே பேரின்பம்

- (வாழ்த்) (ஏழை)