தோத்திர
பாத்திரனே,
தேவா,தோத்திரந் துதியுமக்கே!
நேத்திரம்போல்முழு
ராத்ரியுங்காத்தோய்;
நித்தியம்
துதியுமக்கே!
1.சத்துரு
பயங்களின்றி - நல்ல
நித்திரை
செய்ய எமை
பத்திரமாய்ச்சீ
ராட்டி உறக்கியே
சுற்றிலுங்
கோட்டையானாய்
2.விடிந்திருள்
ஏகும்வரை - கண்ணின்
விழிகளை
மூடாமல்,
துடி
கொள் தாய்போல் படிமிசை
எமதுதுணை
எனக் காத்தவனே
3.காரிருள்
அகன்றிடவே - நல்ல
கதிரொளி
திகழ்ந்திடவே,
பாரிதைப்
புரட்டி உருளச்செய்
தேகனபாங்கு
சீராக்கி வைத்தாய்
4.இன்றைத்
தினமிதிலும் - தொழில்
எந்தெந்த
வகைகளிலும்
உன்
திரு மறைப்படி ஒழுகிட
எமக்கருள்ஊன்றியேகாத்துக்கொள்வாய்!