Type Here to Get Search Results !

Tamil Song - 133 - Thothira Paththiraney

தோத்திர பாத்திரனே,
தேவா,தோத்திரந் துதியுமக்கே!
நேத்திரம்போல்முழு ராத்ரியுங்காத்தோய்;
நித்தியம் துதியுமக்கே!

1.சத்துரு பயங்களின்றி - நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங் கோட்டையானாய்

2.விடிந்திருள் ஏகும்வரை - கண்ணின்
விழிகளை மூடாமல்,
துடி கொள் தாய்போல் படிமிசை
எமதுதுணை எனக் காத்தவனே

3.காரிருள் அகன்றிடவே - நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே,
பாரிதைப் புரட்டி உருளச்செய்
தேகனபாங்கு சீராக்கி வைத்தாய்

4.இன்றைத் தினமிதிலும் - தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திரு மறைப்படி ஒழுகிட

எமக்கருள்ஊன்றியேகாத்துக்கொள்வாய்!