பவனி
செல்கின்றார் ராசா - நாம்
பாடிப்
புகழ்வோம், நேசா!
அவனிதனிலே
மறிமேல்
ஏறி
ஆனந்தம் பரமானந்தம்!
1.எருசலேமின்
பதியே - சுரர்
கரிசனையுள்ள
நிதியே!
அருகில்
நின்ற அனைவர் போற்றும்
அரசே,
எங்கள் சிரசே! - பவனி
2.பன்னிரண்டு
சீஷர் சென்று - நின்று
பாங்காய்
வஸ்திரம் விரிக்க நன்னயம்சேர்
மனுவின்
சேனை நாதம் கீதம் ஓத!
3.குருத்தோலைகள்
பிடிக்க - பாலர்
கும்புகும்பாகவே
நடிக்க பெருத்த தொனியாய்
ஓசன்னவென்று
போற்ற மனம் தேற்ற!