துதி
தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்
சுப
மங்கள மிகு சம்பிரம சுப
சோபன ஷேமம்
1.அதி
சுந்தர நிறை கொண்டுயர் அருள்
மோக்கிஷ தீபன் .
கதி
உம்பர்கள் தோலும் இங்கித கருணைப்
பிர தாபன் .- துதி
2.மந்தைஆயர்
பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய
அத்தனார்
நிந்தையால்
ஒரு கந்தை மூடவும்வந்த மாபரி
சுத்தனார்
3.திருவான்
உல கரசாய் வளர் தேவ
சொரூபானார்
ஒருமாதுடை
வினை மாறிட நரர் ரூபமதானார்
4.அபிராம்
முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்
எபிரேயர்கள்
குலம் தாவீ தென் அரசற்
கோர் குமாரன்
5.சாதா
ரண வேதா கமசாத்ர சுவிசேஷன்
கோதே
புரி
ஆதா முடை கோத்ர திரு
வேஷன்
6.விண்
ணாடரும் மண் ணாடரும் மேவுந்
திருப்பாதன்
பண்ணோதுவர்
கண்ணாம் வளர் பரமண்டல நாதன்