வந்தாளும்
யேசுவே வாருமிதில் - தேவ
மைந்தர்கள்
கூடுமிந் நேரமிதில்
1.பத்மு தீவில்
பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள்
கூட்டமெல்லாம் சக்தியற்றுச்
சோரவே
இத்தினத்தில்
இங்கு
வந்திடும்
- தேவா
2.நல்வழியை நாடிடாமல்
ஓடும் நரர்
யாவர்க்கும்
கல்வாரியின் அன்பையின்று
கர்த்தனே
நீர் காட்டியே நற்குணம்
அவர்க்கு
நல்கிடும் - தேவா
3.சக்தியில்லை
எங்களுக்கு
சாம்பலும்
தூசியும்
கர்த்தனே
கருணை கூர்ந்து
தந்திடும்
சர்வாயுதம்
புத்தியாக
யுத்தம் செய்திட - தேவா
4.என்னை
நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன்
உத்தரம்
பின்னும் நீ அறிந்திடாத
வல்லமைகள்
காட்டுவேன்
என்றவா
இந்நேரம் வாருமே - தேவா
5.சதா
காலங்களிலும் இருப்பேனுங்கள்
கூடவே
சத்துருவின் வல்லமைகள் ஒன்றும்
மேற்கொள்ளாதென்றீர்
ஆதலாலனந்த
ஸ்தோத்திரம்
- தேவா