தூயாதி தூயவரே
உமது புகழை, நான் பாடுவேன்-(2)
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின்
புகழ் பாட வேண்டும் (2) – தூயாதி
1.சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம்
செந்நீரால் என்னுள்ளம்
கழுவினீரே (2) – தூயாதி
2.பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே (2) – தூயாதி
பாவி என் பாவ நோய் நீக்கினீரே (2) – தூயாதி
3.துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தந்தீரே (2) – தூயாதி
துன்பங்கள் தாங்கிட பெலன் தந்தீரே (2) – தூயாதி
4.தம் ஜீவன் எனக்காக தந்தவரே
என்னையே பலியாக ஏற்றிடுமே (2) - தூயாதி
5. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி