Type Here to Get Search Results !

தாய் மடியில் தவழுகின்ற பாடல் வரிகள்



தாய் மடியில் தவழுகின்ற
குழந்தையைப்  போல
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன் நான்
                             
1. கவலையில்லையே கலக்கம் இல்லையே
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் -நான்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர்

2.செய்த நன்மைகள் நினைக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன்-நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே

3. துணையாளரே துணையானீரே
இணையில்லா மணவாளரே - என்
உணவாக வந்தீரையா 

உயிரோடு கலந்தீரையா-என்