மன்னிப்புத் தாருமையா என் மணவாளனே
எனக்குள் வாருமையா என் எஜமானனே
மணவாளனே மணவாளனே
எஜமானனே என் இயேசுராஜனே
பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா
உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா
என் ஆண்டவரே என் சிருஷ்டிகரே
பாவம் போக்கப் பலியானீரே
உந்தன் பாதம் சரணமையா - நான்
எந்தன் மனதில் ஆறுதலில்லை
என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா
என் ஆண்டவரே என் ஆறுதலே
யாரிடம் சொல்வேனையா
உம்மிடந்தான் சொல்வேனையா - நான்
உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன்
புது ஆவியாலே நிரப்பிடுமையா
என் புகலிடமே என் புதுபெலனே
உந்தன் சாயலாக மாற்றுமே
உந்தன் மார்பிலே சாய்ந்திடுவேன் - நான்