வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல் தேவனவர்
காத்திடுவார் தம் கிருபையீந்தென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே
கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலைக் கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட
அழைக்கின்றாரே
2.கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடயோ
ரோகங்கள் மாற்றிடும் ஒளஷாதம்
தாயினும் மேலவர் தயையிதே
3. கிருபையின் காலம் முடிந்திடுமுன்
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரனனாய் உன்னை மாற்றிடவே
புதுமையாய் ஜீவனால் நிறைத்திடுவார்
4.கிறிஸ்துவின் மரண சாயலிலே
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார்
5.வருகையின் நாள் நெருங்கிடுதே
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார்