என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியை கண்ட
பின்னும் நேசியாமல் இருப்பாயோ?
1.பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் நான் உனக்காய்
2.பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் பார்
உன் பாவம் யாவுமே
சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா
3.வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா
என்னை அனுப்பிடவே ஓடி வந்தேன் மானிடனாய்
உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரி காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ!