ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச்செய்வீர்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம் (2)
2. ஊக்கத்துடனே ஓர் மனமாய்
வாக்குத் தத்தத்தைப் பற்றிக்கொண்டு
நோக்கத்தை யெல்லாம்
நேர்மையாக்கி
கேட்கும்படிக்கு கிருபை செய்யும்
3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடு
வேண்டிக்கொள்வோம்
4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூ றெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்