நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே
உமக்காய்
ஏங்குதே
2. புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெய்
பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர்
3. அப்பா உம் சந்நிதியில்
எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில்
மூடிநகுவேன்
4. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காதா
ஒப்பற்ற செல்வமே!