அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே
1.ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா
என்மேல் உம் தயை பெரிதையா
2.பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரிலென் அன்பேனையா
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ
3.அலைந்தேன் பல நாள் உமையு மறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே
எனையும் அணைத்தீர் அன்பாலே
4.பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைபோல்
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா
5.இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ