Type Here to Get Search Results !

Tamil Song - 391 - Naanum En Veetarumo

நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

1. கைவிடா தெய்வமே
கருணையின் சிகரமே
மெய்யான தீபமே
என் வாழ்வின் பாக்கியமே

முழந்தாழ் படியிட்டு
முழுவதும் தருகிறேன் நான்

2. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம்
பார்த்துக் கொள்வீர்

3. எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் காண்பவரே

4.யேகோவா ஷம்மா
கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம்
சமாதானம் தருகிறீர்

5.யேகோவா ரூபா
என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா
சுகம் தரும் தெய்வமே

6.பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே

இனிமேலும் வருபவரே