நான்
உன்னைவிட்டு விலகுவதில்லை
நான்
உன்னை என்றும்கைவிடுவதில்லை
நான்
உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிபோல்
உன்னைக் காப்பேன்
1.பயப்படாதே
நீ மனமே - நான்
காத்திடுவேன்
உன்னை தினமே
அற்புதங்கள்
நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய்
நான்
நடத்திடுவேன்
2.அனுதினம்
என்னைத் தேடிடுவாய் - நான்
அளித்திடும்
பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம்
போல் செழித்திடுவாய் - நான்
ஆசையாய்
உண்ண கனி கொடுப்பாய்
3.நீதியின்
வலக்கரத்தாலே - உன்னை
தாங்குவேன்
நான் அன்பினாலே ஆவியில்
உண்மையாய்
ஜெபித்திடுவாய் - தினம்
அல்லேலூயா
என்றே ஆர்ப்பரிப்பாய்