கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்
1.
நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன் --- ஜெயம்
2.
அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறவர் --- ஜெயம்
3.
நம்பிக்கை தேவனே
நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார் --- ஜெயம்
4.
உண்மை தேவனே
உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பவர்
உறங்குவதில்லையே --- ஜெயம்