கோடாகோடி
ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி
ராஜன் தேவாதி தேவன்
இயேசு
கிறிஸ்துவுக்கே மகிமை
1. பரிசுத்தவான்கள்
சபை நடுவே
தரிசிக்கும்
தேவ சமூகத்திலே
அல்லேலுயா
அல்லேலுயா
ஆவியில்
பாடி மகிழுவோம்
ஆண்டவர்
இயேசுவைக் கொண்டாடுவோம்
2. கிருபாசனத்தண்டை
நெருங்குவோம்
திருரத்தம்
கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா
அல்லேலுயா
கண்டேன்
சகாயம் இரக்கமே
கர்த்தர்
கிருபை என்றும் உள்ளதே
3. குருவி
பறவை வானம்பாடியே
கவலையின்றிப்
பறந்து பாடுதே
அல்லேலுயா
அல்லேலுயா
அற்புதமான
சிருஷ்டிகரே
அந்த
விசுவாசம் கற்றறிந்தோம்
4. கவலைப்படாதீர்கள்
என்றுரைத்தீர்
காட்டுப்
புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா
அல்லேலுயா
ஆடை
ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று
தந்தெம்மை ஆதரித்தீர்
5. கணக்கில்லா
நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன்
பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா
அல்லேலுயா
தேவ
குமாரன் வந்திடும் நாள்
தூய
முகம் கண்டு கெம்பீரிப்போம்