இயேசுவால் பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்தத்தாலே
கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்ல
எல்லாமே இயேசு.... என் இயேசு....
எல்லாம் இயேசு இயேசு இயேசு (2)
1. பரலோகம் தாய் வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வரவேணும்
தப்பாமல்!
2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர்புண்ணியங்கள்அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார்!
3. லாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன்!
4. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடருகின்றேன்!
5. பாடுகள் அனுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை
வெளிப்படும் நாளில்
களிகூர்ந்து மகிடிநந்திருப்பேன்!