திரும்பிப் பாராதே, சோதோமைத்
திரும்பிப் பாராதே
விரும்பிப் பார்த்து, லோத்தின் பெண்டு
வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு,
1. சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு,-
மாதர் சந்தடி செய்யும்
சீராட்டு, விந்தையான
போரோட்டு, - மந்தை
வேடிக்கை என்று விட்டோட்டு
2. செல்வத்திலே மெத்தச் செருக்கு - நீ
செய்வதெல்லாம் முழுத்-திருக்கு
பல் வழி நீரோட்டப்
பெருக்கு- ஏன்
பண்ணுகிறாய்
இந்த முறுக்கு?
3. அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் -
உல காசையினால் மெத்த
தியங்கிறாய்
சங்கடத்துள்பட்டு
மயங்கிறாய்
- வீண்
சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் ?
4. ஆண்டவர் யேசு சகாயம் - உனக்
கடைக்கலம் ஐந்து காயம்;
வேண்டிக் கொள்வது நேயம்; கை
விடாதே இந்த