Type Here to Get Search Results !

Tamil Song - 738 - Poovin Narkantham Veesum

பூவின் நற்கந்தம் வீசும்
சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும்
பள்ளத்தாக்கிலேயும்
இயேசுநாதர் பின்சென்றேகி
மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம்
நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர்
பின்செல்வேனே எங்கேயும்
எப்போதும் பின்னே
செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர்
பின்செல்வேனே
இயேசு காட்டும்
பாதையெல்லாம் செல்லுவேன்!

2. கார்மேகம் மேலே மூடும்
பள்ளமெங்கிலும்
காற்று கோரமாக மோதும்
ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்ட சற்றும்
அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத்
தைரியம் கொள்ளுவேன்

3. நாள்தோறும் இயேசுநாதர்
கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும்
பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றி
சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு

சேர்த்து வாழ்விப்பார்