வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?
ஞானவான்களே, நிதாவான்களே
என்ன இது? - வானம்
1. பொன்னகா தாளும்,
உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை
பூபதி வந்ததேதிசயம்? ஆ!
என்ன இது? - வானம்
2. சத்ய சருவேசன், துத்ய
கிருபைவாசன் நித்ய
பிதாவினோர்
மகத்துவக் குமாரனே இவர்?
ஆ என்ன இது? - வானம்
3. மந்தைக் காட்டிலே
மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த
சூட்சி, நிந்தைப் பாவிகள்
சொந்தக் கண்காட்சி! ஆ! என்ன
இது - வானம்
4. வேறே பேரல்ல, சுரர்
விண்ணவர் ஆருமல்ல
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லில்
கிடக்கிறார்! ஆ! என்ன இது -
வானம்
5. சீயோனின் மாதே,
இனி ஷெணந்தரியாதே
மாயமென்ன? உனக்குச்
சொல்லவோ? வந்தவர்
மணவாளனல்லவோ ஆ!
என்ன இது? - வானம்