அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர் ஆவலாய்
அழைக்கிறார் இதோ - நீயும்
1. பாவத்தை ஏற்றவர் பலியாய்
மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில்
கண்கொள்ளாத காட்சியே
கண்டிடும் வேண்டிடும்
பாவபாரம் நீக்கிடும்
2. நோயையும் ஏற்றவர்
பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை
நிச்சயமாய்
தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே -
நேயமாய்
அழைக்கிறார்
3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே -
அண்ணல் இயேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே -
துரிதமாய்
நீ வாராயோ
4. அந்தக் கேடடைந்தார்
அழகற்றுத் தொங்கினார்
சொந்தமாக சேர்த்திட
இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும்
சந்திப்பார் நீ வாராயோ!