சிலுவை திரு சிலுவை
கிருபையின் இனிய மறைவினில் மறைத்து
கருணையின் தெய்வத்தை காட்டிடும்
அறிய - சிலுவை
1. பரியாசம் பசிதாகமடைந்து
படுகாயம் கடும் வேதனை அடைந்து
பாவமறியா பரிசுத்தர் இயேசு - 2
பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும்
2. கைகள் கால்களில் ஆணி கடாவ
கடும் முள்முடி பின்னி தலையிலே
சூடநான்கு காயங்கள் போதாதென்று
-2 நடுவிலாவையும்
பிளந்திடச்செய்த
3. மரணத்தால் சாத்தானின்
தலையை நசுக்க
இரத்தத்தால் பாவகறைகள் நீக்க
உந்தன் வியாதியின் வேதனை
ஒழிய -2 பாவத்திலின்று நீ
விடுதலை அடைய
4. லோகத்தின் இன்ப பாதையில் ஓடி
வாழும் பாவியை சிலுவையில் தேடி
சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து -2
அன்பினில் ஏற்று ஐங்காயமான