Type Here to Get Search Results !

Tamil Song - 662 - Athi Mangalak

அதி-மங்கலக் காரணனே,
துதி-தங்கிய பூரணனே - நரர்
வாழ விண் துறந்தோர்
ஏழையாய் ப் பிறந்த
வண்மையே தாரணனே!

1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்-உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றி வையாய்  துங்கவனே

2. முடி-மன்னர்கள் மேடையையும்,
மிகு-உன்னத வீடதையும்-நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர்
தொழ, வந்தனையோ தரையில்?

3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்த்திரள் பாடுதற்கும்-
உனைப் பின்பற்றுவோர்
முற்றும் துன்பற்று வாழ்தற்கும்

பெற்ற நற் கோலம் இதோ?