பலன் கொடுப்பீர்
நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல்
பலன் கொடுப்பீர்
வழியோரமா? நான் கற்பாறையா?
முள்புதரா? நான் நல்ல நிலமா?
1. இயேசுவின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பது போல்
பகைவனாம் தீயோன்
பறித்திடுவான்
2. மண்ணில்லா பாறை நிலமாகும்
மனதில் நிலையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
வெயிலில் வசனம் கருகி விடும்
3. முட்செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் ஆசைகள்
நெறித்திடவே
இறைவனின் வார்த்தை
வளரவில்லை
முட்கள் வாழ்க்கையை
நெருக்கிவிடும்
4. இயேசுவின் வார்த்தை
உணர்ந்திடுவோர்
குறையில்லா பண்பட்ட
நிலமாவார்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் தம்
வாழ்வில்