அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
- அதிசய
அன்பரின் நேசம் ஆர்
சொல்லலாகும்?துன்ப அகோரம்
தொடர்ந்திடும் நேரம் - அதிசய
1. வியாழனிரவில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ?
(2)
2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே,
வருந்தின சீஷர்க்காய்
மருகி நின்றாரே (2)
3. இதுவென் சரீரம்,
இதுவெந்தன் ரத்தம்,
எனை நினைத்திடும்படி
அருந்துமென்றாரே (2)
4. செடியும் கொடியும்போல்
சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம்
நிலைப்பீரென்றாரே (2)
5. பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய்
வேண்டிக்கொண்டாரே(2)