அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதிதேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்!
ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே!
1.துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்!
2.வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலை தந்திடுவார்!