Type Here to Get Search Results !

Tamil Song - 567 - Yesuvin Naamaththil

இயேசுவின் நாமத்தில் நாம்
கூடிடும் சமயங்களில்
பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க

1.மலைகள் விலகினாலும்
மாபர்வதம் நிலைபெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபைகள்
தம் மக்களுக்காறுதலே

2.சீயோனில் அவர் நம்மையே
சிறுமந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால்

3.கஷ்டங்கள் கவலைகளில்
அன்புக்கரம் நம்மைத் தாங்கிடுமே
நஷ்டங்கள் மாறிடுமே

நாதன் இயேசுவின் நாமத்தினால்