தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் – நானும்
1.அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே - தம்
விண்ணவர் சாயல் அடைவேன்
2.பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கை வேலையில்லாத பொன்வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்
3.சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலனடைய
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்
4.ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே
5.காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகு போல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன்
6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய்த் தரிசித்திட
வாஞ்சையாய்த்தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே!