உம் சமூகம் என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க. . .
இராஜா. . . இயேசு ராஜா
1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே நாளெல்லாம்
உம் நினைவே
2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே
சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும், ஆட்கொள்ளும்
என்னில் ஆளுகை செய்யும்
3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள்
கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா - 2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே!