Type Here to Get Search Results !

Tamil Song - 539 - Paavaththin Paaraththinaal

பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் இயேசுநாதா

2. கெட்ட குமாரனைப்போல்
துஷ்டனாய்  அலைந்தேனப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே

3. கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளையல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீர்
தள்ளாதே சிலுவைநாதா

4. பாவி மரியாளையும்
நன்றியற்ற பேதுருவையும்
அருள் செய்த ஆண்டவனே
கிருபை கூர் ஐயனே
                                                                
5. உம்மோடு வருடங்களாய்
உணவுண்ட யூதாசைப்போல்
கரையற்ற தந்தை உம்மை
வஞ்சித்தேன் ஏசுநாதா!

6. தந்தையை விட்ட பின்பு
தவிடுதான் ஆகாரமோ
மனங்கசிந்து நொந்தேன்
கண்ணீரைத் துடைத்திடுமே

7. அறையுண்ட சிலுவையினின்று
அணைத்திட வாருமையா
நின் பாதம் வீடிநந்தேனையா
சமாதானம் தாருமையா

8. தந்தை, தாய்  தமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்

நீரல்லால் யாருமில்லை!