வினை சூழாதிந்த இரவினில் காத்தாள்
விமலா, கிறிஸ்து நாதா!
கனகாபி ஷேகனே, அவனியர்க்
கொளிர், பிரகாசனே,
பவ நாசனே, ஸ்வாமி!
1. சூரியன் அஸ்தமித்து ஓடிச்
சென்றானே!
ஜோதிநட் சத்திரம் எழுந்தன வானே!
சேரும் விலங்கு பட்சி
உறைபதி தானே
சென்றன; அடியேனும்
பள்ளி கொள்வேனே
2. சென்ற பகல் முழுதும் என்னைக் கண்
பார்த்தாய்; செய் கருமங்களில்
கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்மசரீரம் பிழைக்க
ஊண் பார்த்தாய்;
பொல்லாப் பேயின் மோசம்
நின்றெனைக் காத்தாய்!
3. இன்றைப் பொழுதில் நான் செய்
பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னை
கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும்
உவந்தருள் கூராய் ;
உயிரை எடுப்பையேல்,உன்
முத்தி தாராய் !
4. ஜீவன் தந்தெனை மீட்டோய்
சிறியேன் உன் சொந்தம்
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல்
நிர்ப்பந்தம்;
பாவியேன் தொழுதேன் நின்
பாதார விந்தம்;
பட்சம் வைத்தாள்வையேல்,
அதுவே ஆனந்தம்!