Type Here to Get Search Results !

Tamil Song - 524 - Unnaiyantri Vere Gethi

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமி!
தன்னையே பலியாய்  ஈந்த
மன்னுயிர் ரட்சகனே!
அன்னை தந்தை உற்றார் சுற்றார் -
ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா -ஆசை என்
யேசு ஸ்வாமி!

1.பண்ணின துரோகமெல்லாம்
எண்ணிலாலெத்தனை கோடி,
பாதகத்துக் குண்டோ எல்லை
பாதவித்தேனே தேடி,
கண்ணினாலுன் திருவடிக் - காண
நான் தகுமோ தான்?
கடையனுக் கருள்புரி - மடியுமுன்
யேசு ஸ்வாமி!

2. அஞ்சியஞ்சித் தூரநின்றென்
சஞ்சலங்களை நான் சொல்லி,
அலைகடல் துரும்புபோல் மலைவு
கொண்டேனானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த -
வஞ்சகன் முகம் பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து
கிருபை வை யேசு ஸ்வாமி!

3. எத்தனை கற்றாலும் தேவ-பக்தியேது
மற்ற பாவி,
எவ்வளவு புத்தி கேட்டும்
அவ்வளவுக் கதி தோஷி
பித்தனைப்போல பிதற்றிக் - கத்தியே
புலம்பு மேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப்
பிழைக்க வை யேசு ஸ்வாமி!

4. கள்ளனாம் கபடனென்னைத் - தள்ளி
விட்டாலாவதென்ன?
கல்லைப்போல் கடினங் கொண்ட
கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங் கரைந்தே - உன்றன் - உயர்
சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய்  - உருகவை

யேசு ஸ்வாமி!