இயேசுவே உம்மைப் போலாக
வாஞ்சிக்குதே என்னுள்ளம் (2)
1. பாவம் அறியாது பாவமே
செய்யாதிப்பாரினில் ஜீவித்தீரே
பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே
பெலமதை தாருமையா - உந்தன்
2. உபத்திரவம் உண்டு
உலகினிலே என்றீர்
உலகத்தை வென்றேன் என்றீர்
உம்மைப்போல்
உலகினை ஜெயித்திடவே
பெலமதை தாருமையா - உந்தன்
3. தலை சாய்க்க தலமில்லை
தரணியில் உறவில்லை
நிலையில்லா பூவில் என்றீர்
நானும் உம்மைப்போல்
தியாகம் செய்ய
பெலமதை தாருமையா - உந்தன்
4. சிலுவை சுமந்தென்றும்
என்பின் வராதவன்
அல்ல என் சீஷன் என்றீர்
உம் சித்தப்படி உந்தன்
சேவை செய்ய
பெலமதை தாருமையா - உந்தன்
5. சீயோன் மலையதில்
சிறந்தே இலங்கிடும்
தேவாட்டுக் குட்டி நீரே
சீயோனில் உம்முடன் நானிருக்க
உம்மைப்போல் மாற்றும்
ஐயா என்னை