Type Here to Get Search Results !

Tamil Song - 507 - Irangume En Yesuve

இரங்குமே, என் இயேசுவே
இரக்கத்தின் ஐசுவரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே

1. நித்தம் எமக்காய்  பரிந்துபேசும்
நள்ளிரவின் நண்பனே
அன்பின் பிதா முன்னில்
நின்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபம் கேளுமே

2. உற்றார் பெற்றாரும் குடும்பங்களும்
மற்றும் பலர் மாள்வதைக்
கண்டு சகித்திடா
தென்றும் ஜெபித்திடும்
கண்ணீர் ஜெபம் கேளுமே

3. அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே
யோனா உரைத்த தம்
ஆலோசனை தந்து
ஏழை ஜெபங் கேளுமே

4. எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்திமரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங் கேளுமே

5. பிள்ளைகள் அப்பம்
கிடைத்திடாதோ
பேதைகள் கேட்டிடவே
மேஜை துணிக்கைகள்
தாரும் எனக் கெஞ்சும்
மாந்தர் ஜெபங் கேளுமே

6. தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம்
செத்த நிலை மாற

பக்தர் ஜெபங் கேளுமே