Type Here to Get Search Results !

Tamil song - 442 - Devaa Thirukkadai


தேவா திருக்கடைக்கண் பார் - ஐயா
வினை தீரையா, வினை தீரையா(2) - தேவா
மூவாய் உலகில் வந்த யோவா (2) - சச்சிதானந்தா

1.மேவிய தயை நிரம்பி,
ஆவலுடன் விரும்பி
பாவி எனையே திரும்பிப் பார்,
ஐயா ஸ்வாமி!          - தேவா

2.பொல்லா உலகம் பகை - அதின்
எல்லா செல்வமும் புகை
பொல்லா உலகம் பகை
வல்லா நின் கிருபை (2)
ஆளுமே தேவா - தேவா

3.அந்தி சந்தியும் விடாமல்
சந்திரப் பிசாச டாமல்
அந்தி சந்தியும் விடாமல்
எந்த விதமும் கெடாமல் (2)
ஆளுமே தேவா - தேவா

4.சர்ப்பனை யதாய் உலகம்
இப்படித் துரோகம் செய்தால்
எப்படி அடிமை கரை
யேறுவேன், ஸ்வாமி! - தேவா

5.எத்தனை துயர் அடைந்தேன்!
மெத்தவும் மன துடைந்தேன்;
சித்தம் இரங்காய்,
என் மணவாளனே ஸ்வாமி         - தேவா

6.இந்தத் தினத்தில் எனக்குத் தந்த
சுகத்துக்குனக்கு
வந்தனம்! அனந்தனந்தம்

ஸ்தோத்திரமே, ஸ்வாமி! - தேவா