அநாதி சிநேகத்தால் என்னை
நேசித்தீரையா காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது !
1.அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே –
அன்பு
2.நிலையில்லாத உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே!
3.தாயின் கருவில் தோன்றுமுன்னே
தெரிந்து கொண்டீரே
தயைப் போல ஆற்றி தேற்றி
நடத்தி வந்தீரே
!
4.நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனய்யா!
5.கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபட வில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே
!