Type Here to Get Search Results !

Tamil Song - 416 - Anpin Deivam Yesu Aaruthal

அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் - (2)

1.பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்

2.இயேசு பேசும்போது - என் உள்ளம்
உருகுதே அவர் வார்த்தை படிக்கும் போது
என் வாழ்வு மாறுதே வேதம் ஏந்துவேன்
வெல்வேன் அலகையை - தினம்

3.கண்ணீர் சிந்தும்போது - மனக் கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது - அவர் கரத்தால்  அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்

ஆற்றல் தருகின்றார் - எனக்கு